வியாழன், நவம்பர் 27, 2008

ஒக்கேனக்கல் பிரச்சினையில் பிரதமர் தலையிடமாட்டார்

வணக்கம்.வருக வருக என வாயார வாழ்த்துகிறேன்.என்றும் உங்கள் ஆலிரத்.அசோக்குமார்.
செய்தி -----ஒகேனக்கல் பிரச்சினையில் பிரதமர் தலையிடமாட்டார் .இரு மாநிலங்கள் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்.
வெளுப்பன்: வணக்கம்.வேலை வெட்டி அத்தவங்களே வீணா போனவங்களே . வீட்டுக்கு மேல தண்ணி தொட்டி கட்டுவீங்களோ ,இல்லை தொட்டிக்கு மேல சட்டி வச்சு ,முட்டை பிரியாணி மூட்டை சோறு கட்டுவீங்களோ ,அது உங்க இஷ்டம். அவன் தண்ணி தொட்டி கட்டுனா பக்கத்து தெரு மொட்டை மாடி மறைக்குதுன்னு சொல்லி, உங்க தெரு பிரச்சினையெல்லாம் கொண்டுக்கிட்டு இந்த வெளுப்பன்கிட்ட வந்துடாதீங்க சொல்லிபுட்டேன் ஆமா ..பைசா கோபுரம் மேல ஏறி கேட்டாக்கூட ஓசியில பீசா கிடைக்காது ..நீங்க கூட்டமா சேர்ந்துகிட்டு கும்மி அடிச்சிகிட்டு வந்தாக்கூட ,பல் விளக்காம பஞ்சாயத்துக்கு வரமாட்டான் இந்த வெளுப்பன். கத்தாரில இருந்து கத்தை கத்தையா எப்படி கடன் வாங்குறது? துபாயில இருந்து பீப்பாய் பீப்பாயா எப்படி கோரைப்பாயை சுருட்டுறது? லண்டன்ல இருந்து வண்டி வண்டியா அண்டிப்பருப்பை எப்படி அமுக்குகிறது? ஊழல் பண்ண துட்டைஎல்லாம் உகாண்டாவில் எப்படி ஒளிக்குறது ?ஆஸ்தியெல்லாம் கொண்டு போய் ஆஸ்திரேலியாவில் எப்படி பதுக்குறது? னு சர்வதேச பிரச்சினைய தீர்கிறதுக்கு உள்ளேயே கண்ணாம்முழிஎல்லாம் பிதுங்கி கால் அடி வெளியே தள்ளி நிக்குறான் வெளுப்பன்.. இதுல அமெரிக்க உப்புமா வேற சாப்பிட்டுட்டு புளிச்ச ஏப்பமா வந்துக்கிட்டு இருக்குதுன்னு வெளுப்பனே கதிகலங்கிப்போய் டப்பாங்க்கூத்துப்போடுற இந்த நேரத்துலப்போய் ,அவன் தண்ணி தொட்டி கட்டுறான் ,குப்பை தொட்டி கட்டுறான்னு ,சப்பை விசயத்தஎல்லாம் கொண்டுவந்தீங்க,வெறியாயிடுவான் வெளுப்பன்..சொல்லிபுட்டேன் ..உங்க மொட்டை மாடி பிரச்சினைய தீர்கிறதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு..அந்த வழி என்னன்னா.. கிழக்கு கடற்க்கரைச்சாலை ...இந்த சாலை மேல ஏறி ரெண்டுபேரும் கொஞ்ச தூரம் நடங்க ..அப்புறம் ஒடுங்க ..ஒடுங்க ஒடுங்க ..வேகமா ஒடுங்க..மெரீனா கடற்கரை வரும்.. அங்கே போய் உட்கார்ந்துட்டு ரெண்டுபேரும் சூடா சுண்டல் வாங்கி சாப்பிட்டுட்டு அப்படியே படுத்து தூங்கிடாதீங்க ..சாப்பிட்டுட்டே பேசணும்..உட்கார்ந்துதான் பேசணும்னு இல்லை..ஒத்த கால்ல நின்னுக்கிட்டுக்கூட பேசலாம் ..மல்லாந்து படுத்துக்கிட்டுக்கூட பேசலாம்..ஆனா..காக்கா எச்சம் போட்டா நான் பொறுப்பு இல்லை ..மழை வந்தா குடைய விரிச்சிக்கிட்டு பேசுங்க..வெயில் அடிச்சா.. தயிர் வடைய வாங்கி சாப்பிடுங்க.. வாய் வலிச்சா இடையிடையே கொட்டாவி விட்டுக்கோங்க..இப்படியே பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா ,அதுக்குள்ளே இந்த ஆட்ச்சியே திவால் ஆயிடும் ..மக்களும் மசால் வடை திங்கிற அவசரத்தில இந்த பிரச்சனைய மறந்திடுவாங்க.. சாம்பார் சொத்துக்கு சோன்பப்படிய தொட்டுக்கலாம்..ஆனா தாகத்துக்கு தண்ணி பாம்பை குடிக்க முடியாது..நான் வருகிறேன். என்ன?என்னோட பூங்கா பிடிச்சிருக்கா? உங்க எ-மெயில என்னோட இ-மெயிலுக்கு அனுப்புங்க ..நான் உங்களை என்னோட கூட்டணியில சேத்துக்குவேன்.. அப்புறமா நீங்களும் என்னோடு சேர்ந்து நக்கல் நையாண்டி அடிக்கலாம்..நிலா நிலா ஓடி வா..


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு