சனி, டிசம்பர் 06, 2008

அச்சுதானந்தன் 'நாய்' என்று பேசினாரா?

பெரியோர்களே.. தாய்மார்களே..அருமை இல்லாத வீட்டில் எருமை கூட குடியிருக்காது.. பூவிலே சிறந்த பூ என்ன பூ என்று கேட்டால் ..கப்பூ ..என்று ..கூவம் ஆறு கூத்தடிக்கலாம் ..மப்பூ..என்று டாஸ்மாக் தமுக்கு அடிக்கலாம்....அரிப்பூ என்று சொறிநாய் கூட ..ச்சீ..ச்சீ..சுத்தமான பூனைக்கூட சொல்லலாம்..அய்யய்யோ..வாய் தவறி பூனைன்னு சொல்லிட்டனே ..(மெதுவாக) .இம்..இம்..(தொண்டையை கனைக்கிறார்பூனை என்று சொன்ன காரணத்தினால் ..வெளுப்பனை வழியில மறிச்சு மிதிக்கலாம்..குறுக்கு சந்துல குமுறலாம்..குருக்கேலும்ப எண்ணலாம் என்று ..எட்ட முடியாத எட்டு முழ நீளத்திற்கு ..உள்நாக்கு வெளியே தொங்க.. யானையப்போல் தலையை ஆட்டி ஆட்டி அலையும்..அனகோண்டா கட்சித்தலைவரே.. ..அய்யய்யோ.. வாய் தவறி யானைன்னு சொல்லிட்டனே.. (மெதுவாக)..யானைய பார்த்து யானை என்று பிளிறாமல்.. பூனை என்றா புளுக முடியும்?.. உங்களுக்காக வேண்டுமானால் சொல்லித்தொலைக்கிறேன்..மியாவ்..மியாவ்.. போதுமா..(மக்கள் கூக்குரல்) (அதிர்ச்சியாகிறார் வெளுப்பன் ) (கும்பிடுகிறார்) ....மன்னிப்பூ . . மன்னிப்பூ... பூவிலே சிறந்த பூ..மன்னிப்பூ.. பூனை என்று கூறிய காரணத்தினால்.. பெருச்சாளியப்போல் நாலு காலில் நடந்து மன்னிப்பு கேட்க வேண்டுமா?.. வேலியில் ஓடும் ஒனானைப்போல் மண்டையை மண்டையை ஆட்டி மன்னிப்பு கேட்க வேண்டுமா? ..எங்கே போகிறோம் ..எதற்குப்போகிறோம் ..என்றுக்கூடத் தெரியாமல் ஓடிக்கொண்டே இருக்கும் மண்புழுவைப்போல் மன்னிப்பு கேட்க வேண்டுமா?....(கைத்தட்டல்) ..நீங்கள் வயிறேருஞ்சுபோட்ட வாக்குக்கெல்லாம் விசுவாசமாக..ஒரு நாயைப்போல் உழைக்கும் வெளுப்பன்..பூனை என்று சொல்லக்கூடாதா?..சூடு சொரணை என்றால் என்னவென்றே அறியாமல், மல்லாந்து, குனிந்து,நிமிர்ந்து,உருண்டேல்லாம் மன்னிப்பு கேட்கிறேனே..இதெல்லாம் ஒரு பிழைப்பா..என்று நீங்கள் மட்டும் வெளுப்பனைக்குறை சொல்லி ,கொசு மருந்து அடிக்கலாமா? எப்பொருள் சொன்னார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை..வெளுப்பனுக்கும்..அவன் அளந்து விடும் பொய்க்கும்..நிலா.நிலா.ஓடி வா.......

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு